கழக அணிகளின் கட்சி பணிகள் !! அனல் பறக்கும் தஞ்சை மத்திய மாவட்ட திமுக !!
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆட்சி பொறுப்பில் இருக்கும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான அரசு பல்வேறு மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.
பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், அன்னை தமிழ் அர்ச்சனை திட்டம், மக்களை தேடி மருத்துவம், மகளிர் உரிமை தொகை உள்ளிட்ட அவர்களின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வரும் வேலையில் தமிழ்நாடு முதல்வர் மற்றும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் மாவட்டம் தோறும் சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டு மக்கள் பணியாற்றி வருகின்றனர்.
தற்போது, திராவிட முன்னேற்ற கழகத்தில் மாவட்டம் தோறும் பல்வேறு அணிகளுக்கான அமைப்பாளர்கள், நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களின் பணிகளையும், அவர்களின் ஈடுபாட்டையும் கட்சி தலைமை உன்னிப்பாக கவனித்து வருகின்றது என்பது மறுக்கமுடியாத உண்மை.
தஞ்சை மாவட்டத்தை பொறுத்த வரை தஞ்சை வடக்கு, தெற்கு மற்றும் மத்திய மாவட்டம் என்று மூன்று மாவட்டங்களாக திமுக செயல்பட்டு வருகின்றது. இதில் வடக்கு மற்றும் தெற்கு மாவட்டத்தை விட தஞ்சை மத்திய மாவட்டத்தில் கட்சியின் செயல்பாடுகள் அதிகம் இருப்பதை திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமை உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகள் ஒருசேர ஒத்துக்கொள்கின்றனர்.
தஞ்சை மத்திய மாவட்ட செயலாளராக இருக்க கூடிய திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகரன், கட்சியின் நிர்வாகிகள் அனைவரிடம் ஒன்றி பழகக்கூடியவராக உள்ளார், அதன் மூலம் கட்சியின் நிர்வாகிகளை உற்சாகப்படுத்தியும், ஒருங்கிணைத்தும் கட்சியின் வேலைகளை செய்து வருகின்றார்.
அமைச்சர் பொறுப்பு வழங்காதது குறித்து வருத்தமடையாமல், உட்கட்சி கூட்டங்கள் முதல் தமிழ்நாடு முதல்வர் கலந்து கொள்ளும் அரசு விழாக்கள் வரை அனைத்திலும் முன்னின்று வேலை செய்து வருவதை அவர் உடன் பயணிக்கும் திராவிட முன்னேற்ற கழகத்தின் நிர்வாகிகளே ஆச்சர்யமுடன் பார்த்து வருகின்றனர்.
தமிழகமெங்கும் திமுக தலைமையால் நியமிக்கப்பட்டு வரும் அணி அமைப்பாளர்களின் ஒரு பகுதியாக தஞ்சை மத்திய மாவட்டத்தில் நியமிக்கப்படும் நிர்வாகிகள் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெரும் நேரங்களில் கூட புதிய நிர்வாகிகளுக்கு கட்சி பணிகள் தொடர்பாக பல்வேறு அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் வழங்கி வருவதாக புதிய நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர்.
தஞ்சை நகரை பொறுத்த வரை, நகர செயலாளரும் மாநகராட்சி மேயருமான சன் ராமநாதன் அவர்களும் கழக பணிகளை தீவிரமாக செய்து வருகின்றார். அவரோடு மட்டும்மல்லாமல் தஞ்சை மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் வட்ட கழக நிர்வாகிகளும் மக்கள் பணியை தீவிரமாக செய்து வருகின்றனர். தஞ்சை மாநகராட்சி 34 வது வட்ட உறுப்பினர் சுந்தர செந்தில், 1 வது வட்ட உறுப்பினர் செந்தமிழ் செல்வன், 19 வது வட்ட உறுப்பினர் தமிழ்வாணன் உள்ளிட்டோரின் மக்கள் பணி பொது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தஞ்சை மத்திய மாவட்டத்தில் அணிகளின் பணிகள் :
தஞ்சை மத்திய மாவட்டத்தில் இளைஞரணி உள்ளிட்ட பல்வேறு அணிகளுக்கு அமைப்பாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் நியமிக்கபட்டு வருகின்றனர். இளைஞரணி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள முகில் வேந்தன் அவர்கள் இளைஞரணி துவங்கப்பட்ட நாள் விழாவினை மாவட்ட செயலாளர் தலைமையில் மாவட்ட அலுவலகத்தில் சிறப்பாக நடத்தினார், தொடர்ந்து தமிழ்நாடு முதல்வரின் தஞ்சை வருகையின் போது இளைஞரணி அணி நிர்வாகிகளோடு சிறப்பாக வரவேற்பை வழங்கியுள்ளார்.
அதே போல் தஞ்சை மத்திய மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ராணி கண்ணன் அவர்கள் , தமிழகத்தில் நடைபெற இருக்கின்ற ஆசிய ஹாக்கி போட்டியின் கோப்பையை கட்சி படுத்தும் நிகழ்வினை மாவட்ட செயலாளர், மாவட்ட ஆட்சியர், மாநகர மேயர், சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட அனைவரது முன்னிலையில் சிறப்பாக நடத்தி உள்ளார். முதல்வரின் வருகையின் போதும் அவரது அணி நிர்வாகிகளோடு சிறப்பான வரவேற்பை வழங்கி உள்ளார்.
மகளிர் அணி சார்பாக மணிப்பூரில் நடைபெற்று வரும் கலவரம் மற்றும் மணிப்பூர் பெண்களின் மீதான வன்கொடுமைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் தஞ்சை மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம் பூபதி , காரல் மார்க்ஸ் உள்ளிட்ட மகளிர் அணி மற்றும் மருத்துவ அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேலையில் தஞ்சை மத்திய மாவட்ட திமுகவின் செய்லபாடுகள் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது என்பது உண்மை. கட்சியில் நிலவும் சிறு சிறு உட்கட்சி பூசல்களை தவிர்த்து, தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகரன் தலைமையிலான திமுக நிர்வாகிகளின் கட்சி பணியையும் மக்கள் பணியையும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமை ரசிப்பதை மறுப்பதிற்கில்லை.
Disclaimer :
This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Voice Up.
Publisher : News18